Tuesday 11 March 2014

:தட்டை/எள்ளடை/எல்லடை  

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)
பாசிப்பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)
பச்சை மிளகாய் - 8
பெருங்காயம் - சிறிது
நன்கு புளித்த தயிர் - 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு 

தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை:

* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.
* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.
* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.
* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.
* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.
* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்

No comments:

Post a Comment