- தோசைன்னாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசைன்னா கேட்கவே வேணாம்.. சரி, இப்போ காரதோசை செய்றது எப்புடினு பார்க்கலாமா....
- தேவையான பொருட்கள்:
- அ ரிசி - 1/2 கப்
- துவரம்பருப்பு - 1/4 கப்
- தேங்காய் - 1/2 முடி
- மிளகாய் - 4
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- மிளகு - 10
- உப்பு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - சிறு துண்டு
- மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது
- செய்முறை:
- * அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
- * எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும்.
- * தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- * தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
- * மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை வார்க்கவும்.
இட்லி மாவு தயார் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 4 பங்கு
உளுத்தம் பருப்பு (உளுந்தரிசி) - 1 பங்கு
உப்பு - ருசிகேற்றவாறு
அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை அறைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.
அரைத்த மாவுகளை ஒன்றாக சேர்த்து உப்புடன் கலக்கவும்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 4 பங்கு
உளுத்தம் பருப்பு (உளுந்தரிசி) - 1 பங்கு
உப்பு - ருசிகேற்றவாறு
அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் உளுத்தம் பருப்பை அறைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.
அரைத்த மாவுகளை ஒன்றாக சேர்த்து உப்புடன் கலக்கவும்.