Thursday 13 June 2013

இட்லி மாவு தயார் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 4 பங்கு
உளுத்தம் பருப்பு (உளுந்தரிசி) -  1 பங்கு
உப்பு - ருசிகேற்றவாறு

அரிசியை 6  மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பை 2  மணி நேரம் ஊற வைக்கவும்.

முதலில் உளுத்தம் பருப்பை அறைக்கவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைக்கவும்.

அரைத்த மாவுகளை ஒன்றாக சேர்த்து உப்புடன் கலக்கவும்.

மிளகு பொங்கல்

தேவையான பொருட்கள்:

  • 1. பச்சரிசி - 1 கப்
  • 2. சிறு பருப்பு - 1/4 கப்
  • 3. மிளகு - 1 தேக்கரணடி
  • 4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • 5. எண்ணெய், நெய் - 2 மேஜைக்கரண்டி
  • 6. பெருங்காயம் - 2 சிட்டிகை
  • 7. உப்பு - ருசிக்கு
  • 8. தண்ணீர் - 4 - 4 1/2 கப்
  • 9. முந்திரி - 5 (விரும்பினால்)

செய்முறை:

  • அரிசி, பருப்பை ஒன்றாக கலந்து கழுவி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம் தாளிக்கவும்.
  • இதில் பெருங்காயம் சேர்த்து உடனே அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும்.
  • இத்துடன் உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் 1 விசில் விட்டு 15 நிமிடம் சிறுந்தீயில் வைத்து எடுக்கவும். அல்லது வழக்கம் போல் 5 விசில் வைத்தும் எடுக்கலாம்.
  • எடுத்ததும் நன்றாக ஒரு முறை கலந்து  விட வு ம் .

No comments:

Post a Comment